செந்தலை ந. கவுதமன்
அறிமுகக் குறிப்பு
பெயர் : ந. கவுதமன்
பிறப்பிடம் : தஞ்சை மாவட்டம் செந்தலை
இருப்பிடம் : கோவை மாநகர் சூலூர்
பணி : 36 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு
பணியாற்றிய இடம் : கோவை பூ.சா .கோ சர்வ சன மேல்நிலைப் பள்ளி
கல்வி :
* திருக்காட்டுப் பள்ளி - சர். சிவசாமி
அய்யர் உயர்நிலைப்
பள்ளியில் பள்ளிப்படிப்பு.
* திருவையாறு அரசர் கல்லூரியில் புலவர் படிப்பு .
* மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ.,படிப்பு
சிறப்பிடம்
: # புலவர் தேர்வில் சென்னைப் பல்கலைக்கழக
முதல்
மாணவராகத் தேர்ச்சி பெற்றவர்.
# தமிழக அரசின் "டாக்டர் இராதாகிருட்டிணன் (நல்லாசிரியர்) விருது " பெற்றவர் .
# கோவை பாரதியார் பல்கலைக்கழக "தமிழ்ச் சான்றோர் விருது " பெற்றவர் .
#இலக்கணக்கடல் தி.வே.கோபாலய் யரின் மாணவராய்ப் பயிலும் வாய்ப்பைப் பெற்றவர் .
# 2014 மே, சூன்,
மாதங்களில் மலேசியா, சிங்கப்பூர்
நாடுகளுக்குப் பாவேந்தர் விழா சொற்பொழிவாற்றச்
சென்று
வந்தவர்.
# உலகத் தமிழ்ச்
செம்மொழி மாநாட்டில் "கலைச்
சொல்லாக்க வளர்ச்சி - மொழி தூய்மை நோக்கு "
எனும்
பொருளில் ஆய்வுக் கட்டுரை வழங்கியவர் .
# "பாவேந்தர் பேரவை"
அமைப்பைச் சூலூரில்
நிறுவிக் கடந்த 27 ஆண்டுகளாகப் பாரதிதாசன்
கருத்துகளைப் பரப்பி வருபவர் .
வெளியிட்டுள்ள நூல்கள்:
- சூலூர் வரலாறு,
- கோவை கண்ட மொழிப் போர் ,
- விடுதலைப் போரில்கோவை ,
- கல்வி காத்த கோவை ,
- பகுத்தறிவு இயக்கத்தில் பாரதிதாசன்,
- மதம் கடவுள் மனிதன் : வளர்ச்சி வரலாறு,
- விழிப்பூட்டும் மொழிப் போர்
- பாவேந்தர் வாழ்வில் அழகின் சிரிப்பு
- தமிழக மொழிப்போர் ஈகியர் வரலாறு
- சூலூர் திராவிட இயக்க வரலாறு